
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குபேரா’. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் நாள் செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நாகார்ஜூனா செய்யாத ஒரு குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அந்த சமயம் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டுகொள்ளும் தொழிலதிபர் ஒருவர், அதை அரசுக்கு தெரியாமல் தன்னுடைய தாக்கிக்கொள்ள முயல்கிறார். மேலும் ரூ.50,000 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் பொருட்டு நாகார்ஜூனாவை சிறையில் இருந்து வெளிகொண்டு வருகிறார். தொழிலதிபரின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நாகார்ஜூனா திட்டம் ஒன்றை வகுக்கிறார். அதன்படி வெவ்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட நான்கு பிச்சைக்காரர்களை பினாமியாக நியமிக்கிறார்.
அவர்களின் பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு, ஸ்விஸ் வங்கியில் கணக்குத் தொடங்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. பணம் வெள்ளையாக மாற்றப்பட்ட பின்னர் ஒவ்வொரு பிச்சைக்காரர்களை நாகார்ஜூனா கொலை செய்கிறார். அவரிடமிருந்து தப்பித்த தனுஷ் பத்தாயிரம் கோடி ரூபாயுடன் தலைமறைவாகிறார். நாகார்ஜூனாவின் ஆட்கள் அவரை தேடுகின்றனர். அவர்களிடம் இருந்து தனுஷ் தப்பித்தாரா? பிச்சைக்காரராக இருந்த அவர் குபேரனாக மாறினாரா? என்பது தான் படத்தின் மீதிக் கதை. படம் வெளியான முதல் நாள் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஆனால் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்பதால் இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கடலில் எண்ணெய் இருப்பதை கண்டுபிடிப்பது, அதை அரசுக்கு தெரியாமல் தனதாக்கிக்கொள்ள தொழிலதிபர் முயல்வது, அதற்காக நாகார்ஜூனாவை விடுதலை செய்து அழைத்து வருவது, பிச்சைக்காரர்களை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சிப்பது என முதல் பாகம் மிக வேகமாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாகம் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் தனுஷ் மட்டுமே படத்தை ஒட்டு மொத்த ஆளாக தாங்கி நிற்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் நாகார்ஜூனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் சுத்தமாக ஒட்டவில்லை. அவர் படத்தில் எதற்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
தனுஷ் பிச்சைக்காரராகவும், பணக்காரராகவும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல இடங்களில் படத்தை ஒற்றை ஆளாக தனது தலையில் சுமந்து நிற்கிறார். நாகார்ஜூனா உயர் அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக வரும் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் தேவை இல்லாத ஒன்றாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு திருப்பதி, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. படத்தின் நீளம் படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. இடைவெளிக்கு முன்னர் ஏற்படும் தேக்கம் படம் முடியும் வரை நீடிப்பதாகவும், கடைசி 20 நிமிடங்கள் மட்டுமே சுவாரஸ்யமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. படம் இந்தியாவில் சுமார் ரூ.10.72 கோடி (தோராயமாக) வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல்கள் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சில இணையதளங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை மட்டுமே. அதிகாரப்பூர்வு வசூல் விவரங்களை விரைவில் படக்ழுவினர் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.