உண்மையை காலம் ஏன் சொல்லணும்? நீங்களே சொல்லுங்க மிஸ்டர் வைரமுத்து !! கலாய்த்த கஸ்தூரி !!

By Selvanayagam PFirst Published Oct 12, 2018, 12:55 PM IST
Highlights

பாடகி சின்மயி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்று பதில் அளித்திருந்த கவஞர் வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, உண்மையை காலம் ஏன்  சொல்லணும்? நீங்களே சொல்லுங்க மிஸ்டர் வைரமுத்து என கலாய்த்துள்ளார்.

அண்மைக்காலமாக பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக்காட்டும் இந்த `மி டூ #MeToo’  தற்போது தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.

கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் இந்த விவகாரம் முற்ற காரணமாக அமைந்தது.

அந்த டுவிட் குறித்து   பாடகி சின்மயி `அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.மேலும் அவர் 2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள், பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார். மேலும் காலம் உண்மையைச் சொல்லும் என்றும் தெரிவித்திருந்தார்.

பாடகி சின்மயிக்கு ஆதரவாக முன்னணி நட்சத்திரங்கள் சமந்தா, சித்தார்த், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதர பெரிய நட்சத்திரங்கள் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.  

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ?  என்று  கலாய்த்துள்ளார்.

சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிற மாதிரி உள்ளது என கடுமையாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

click me!