
தீபாவளியில் விஜய்யின் பிகில் படத்துடன் மோதி ஜெயித்த நம்பிக்கையாலோ என்னவோ வரும் பொங்கலுக்கு மாபெரும் மலை ஒன்றுடன் மோதத்தயாராகிவிட்டனர் நடிகர் கார்த்தியும் அவரது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும். யெஸ் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ ரஜியின் ‘பேட்ட’படத்தோடு மோத முழு மூச்சாக தயாராகி வருகிறது.
பிகிலை விட பத்து மடங்கு குறைவான பட்ஜெட்டில் தயாரான கைதி வசூலில் பட்டையக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதே நிறுவனத்தில் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று சில இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடந்து வந்த இடங்களில் தகராறில் ஈடுபட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஜ்கசியமாக நடந்து வருகிறது.
துவக்கத்தில் டிசம்பர் ரிலீஸ் என்று திட்டமிடப்பட்ட இப்படத்தை தற்போது பொங்கலன்று ரஜினியின் பேட்ட படத்தோடு ரிலீஸ் செய்ய கார்த்தியும் தயாரிப்பாளரும் முடிவெடுத்துவிட்டார்களாம். 200 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘பிகில்’படத்துக்கு முன்னே கதை அம்சம் கொண்ட ‘கைதி’படத்தை தான் மக்கள் ஆதரித்தார்கள். எனவே இனி கதைதான் முக்கியம். எவ்வளவு பெரிய நட்சத்திரத்தின் படத்தோடும் நல்ல கதை கொண்ட படம் மோதி ஜெயிக முடியும் என்பது அவர்களது கணக்கு. ஆனால் டிசம்பர் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க மாட்டார்களாம்.அடடே பொங்கல் ரிலிஸ் இப்பவே களை கட்டுதே?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.