20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் இளையராஜாவின் தம்பி கமல்ஹாசன்...

Published : Jul 16, 2019, 02:27 PM IST
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் இளையராஜாவின் தம்பி கமல்ஹாசன்...

சுருக்கம்

சமீபத்திய மேடைதோறும் இசைஞானி இளையராஜாவை எனது சொந்த அண்ணன் போன்றவர் என்று பாசம் பொங்க விளித்துவரும் கமல், தனது ‘தலைவன் இருக்கிறான்’படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்திருக்கிறார்.

சமீபத்திய மேடைதோறும் இசைஞானி இளையராஜாவை எனது சொந்த அண்ணன் போன்றவர் என்று பாசம் பொங்க விளித்துவரும் கமல், தனது ‘தலைவன் இருக்கிறான்’படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்திருக்கிறார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல் நடித்து வந்த ‘சபாஷ் நாயுடு’படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு வேறொரு படத்தை கமல் நடித்துத்தரவிருக்கிறார் என்ற செய்தியை முன்னரே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் நேற்று இரவு அச்செய்தியை உறுதி செய்த கமல் ‘தலைவன் இருக்கிறான்’படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

கமல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய கடைசிப்படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் துவங்கி 2000 தீபாவளிக்கு வெளியான ‘தெனாலி’. ஷங்கரின் ‘இந்தியன் 2’வில் ரஹ்மானுடன் தான் பணியாற்றப்போகிறோம் என்று நினைத்திருந்த கமலுக்கு அனிருத்தை இசையமைப்பாளராக அறிவித்து அதிர்ச்சி அளித்திருந்தார் ஷங்கர்.இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தலைவன் இருக்கிறான்’க்காக ரஹ்மானுடன் இணைந்திருக்கிறார் கமல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!