"பணம் கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷத்தை தொலைத்து விட்டேன்" வருந்தி உருகும் கமலஹாசன்...

Asianet News Tamil  
Published : Apr 20, 2017, 06:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
"பணம் கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷத்தை தொலைத்து விட்டேன்" வருந்தி உருகும் கமலஹாசன்...

சுருக்கம்

kamal hassan talk about her library

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கடந்த சில மாதங்களாக பல சோதனைகள் அவரை வாட்டி வதைத்து வருகிறது, கௌதமியில் பிரிவில் ஆரம்பித்து கால் முறிவு, அண்ணனின் மரணம் தற்போது அவர்  வீட்டில் ஏற்பட்டுள்ள தீ என பல சோகமான நிகழ்வுகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது புதிய வீடும் அதற்கு அருகில் தயாரிப்பு ஸ்டுடியோ ஒன்றும் கட்டி வருகிறார். 

இந்த கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் தனக்கு ஆண்டு ஒன்றுக்கு 600 மணி நேரம் மிச்சமாகும் என்றும், அதனை பயனுள்ள வழியில் கழிக்க முற்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் கமல்ஹாசன் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் அவர்  பொக்கிஷம் போல் சேர்த்து வைத்திருந்த விலைமதிப்பில்லாத புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளது அவர் மனதை அதிகளவு வருத்தமடைய செய்துள்ளதாம். 

தீயில் எரிந்த நூல்களில் மறைந்த பிரபல எழுத்தாளர்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இனி அவற்றை பணம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க k-drama பிரியரா? மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய சீரிஸ்! Netflixல் இருக்கு
Pushpa 2 Japan : ஜப்பானில் காத்து வாங்கிய அல்லுவின் படம்.. இதுதான் காரணமா? முழு தகவல் உள்ளே