முதன் முதலாக மேடையேறிய கலாநிதி மாறன் !! விஜய்க்கு புகழாரம் !!

By Selvanayagam PFirst Published Oct 5, 2018, 10:34 PM IST
Highlights

சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதன் முதலாக சன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலாநிதி மாறன் மேடையேறி பேசினார். அப்போது நடிகர் விஜயின்  எளிமை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் உழைப்பு, இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானின் தமிழ் பற்று போன்றவை குறித்து பாராட்டிப் பேசினார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதன்  இசைவெளியீட்டு விழாவில் மீடியா ஜாம்பாவான் கலாநிதி மாறன் முதன் முதலாக மேடை ஏறி பேசினார். சிம்டாங்காரன் பாடல் தனக்கு போட்டுக் காட்டப்பட்டதாகவும், முதலில் புரியாத அந்தப் பாடல் பின்னர் சூப்பர் ஹிட்டானது என கூறினார். ஆடியோவிலேயே இத்தனை ஹிட்டான இந்தப் பாடல் விஜயின் நடிப்பில், முருகதாசின் இயக்கத்தில் எப்படி வெற்றி அடையபோகுது பாருங்கள் என தெரிவித்தார்.

விஜய் தொழில் மீது மிகுந்த பக்தியுள்ளவர் என்றும், ஷுட்டிங் என்றால் சரியான டைமுக்கு வந்து விடுவார் என்றும் பாராட்டினர். தமிழ் திரையுலகில்  எளிமையான இரு மனிதர்கள் உள்ளனர். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றொருவர் விஜய் என கூறினார்.

நடிகர் விஜய் எல்லா கேரக்டரும் பண்ணிவிட்டார். இனி  அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றும், அவர் அகில இந்திய லெவலுக்கு போக வேண்டும் என்றும் பாராட்டினர்.

இதே போல ரகுமானின் தமிழ்ப்பற்று குறித்தும் சிலாகித்துப் பேசினார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன் டைமுக்குள், சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தாகவும் பாராட்டிப் பேசினார்.

click me!