அழைப்பு வந்தும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? காஜல் அகர்வால் ஓபன் டாக்!

Published : Jun 01, 2019, 12:40 PM IST
அழைப்பு வந்தும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? காஜல் அகர்வால் ஓபன் டாக்!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 30 ஆம் தேதி அன்று, மீண்டும் பாரத பிரதமராக பதவி ஏற்றார். டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில், பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 30 ஆம் தேதி அன்று, மீண்டும் பாரத பிரதமராக பதவி ஏற்றார். டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில், பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் ஏன் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என முதல் முறையாக காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். ஆனால் அழைப்பிதழ் மிகவும் தாமதமாக எனக்கு கிடைத்ததால், கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என கூறியுள்ளார். மேலும் இரண்டாவதாக பாரத பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடியின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்