
ஜல்லிக்கட்டில் போராடினேன் என்கிற முத்திரையை வைத்துக்கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஜூலி. முதலில் இவர் இதில் கலந்து கொண்டதில் தங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என கூறிய அவருடைய குடும்பத்தினர் தற்போது ஜூலியை வெறுக்கிற நிலையில் இருப்பதாக ஜூலியின் தம்பி ஜோஷ்வா கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய ஜோஷ்வா, என்னுடைய அக்காவை சுதந்திரமாக நாங்கள் வளர்த்தது அவளுக்கு இந்த உலகை பற்றிய புரிதல் வேண்டும் என்பதற்காக தான்.
இதன் மூலம் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பங்கு பெற்றார். பிக் பாஸ் அழைப்பு வந்தபோது இது புது அனுபவமாக இருக்கும் என்று தான் அவரை அனுப்பிவைத்தோம். ஆனால் இவர் ஒவ்வொரு நாளும் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அருவருப்பாக தான் இருக்கிறது.
தினமும் என்ன பிரச்சனையை அவர் இழுத்து விடுவார் என கவலையாக இருக்கிறது. இதில் அவர் கலந்து கொண்டதால் அவரை பலர் தவறாகத்தான் பார்க்கின்றனர். எப்போது அவர் வெளியே வருவார் என்று தான் நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக ஜோஷ்வா மிகவும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.