
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களை விட அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ஜல்லிக்கட்டு ஜூலி தான். இவர் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராடியவர் என்பதால். பலர் இவருக்கு தங்களுடைய ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ஆனால் இவருடைய நடவடிக்கைகள், மக்களுக்கு பிடிக்காமல் ஒரே வாரத்திலேயே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவருக்கு ஆதரவை தெரிவித்த அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜூலி பல நாட்களுக்கு பின் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
"வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவ்வளவு நாட்கள் நடித்ததை அவரே ஒப்புக்கொண்டார்.
மேலும் ஜூலியை நடிக்காதே என ஆர்த்தி கூறியபோதும், ஓவியா உன்னால் எப்படி இவ்வளவு நாட்கள் நடிக்க முடிகிறது என கேட்டபோது நான் நடிக்கவில்லை என கூறி வந்த ஜூலி. தற்போது தானாக முன்வந்து இது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.