பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர ஜோடிகள் அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் தம்பதியினர்.
ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஏ தில் ஐ முஷ்கில் படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்தது அபிஷேக்கிற்கு பிடிக்கவில்லை என்பதால் இருவருக்குள்ளும் சண்டை என கூறப்பட்டது.
தற்போது அபிஷேக் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யாவை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்த ஆசை படுகிறாராம். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
இந்த குழப்பதினால் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனிடையில் ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் இணைந்து அனுராக் கஷ்யப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.