சபரிமலையில் பல்லாக்கில் தூக்கி செல்லப்பட்ட இளையராஜா..! தீண்டாமை பேசியவர்களுக்கு சவுக்கடி கொடுத்த தேவசம் போர்டு !

By manimegalai aFirst Published Jan 19, 2020, 5:00 PM IST
Highlights

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை சபரிமலை தேவசம் போர்டு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.  சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கடந்த வாரம் கௌரவித்தது தேவசம் போர்டு . 

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை  தேவசம் போர்டு  ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.  சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கடந்த வாரம் கௌரவித்தது தேவசம் போர்டு . 

இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை இளையராஜாவிற்கு வழங்கப்பட்டது.  கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான  ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான (2020 ) ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமீபத்தில் அறிவித்தது சபரிமலை தேவசம் போர்டு .

கடந்த வாரம் நடைபெற்ற விருது விழாவில்,  இளையராஜாவின் பாதம் கூட கிழே படாதவாறு, அவரை பல்லாக்கில் தூக்கி வந்து, கௌரவித்து ஹரிஹராசனம் விருதை கொடுத்துள்ளனர். சபரிமலை தேவசம் போர்டின்   இந்த செயல், பல வருடங்களாக தீண்டாமை குறித்து பேசி வருபவர்களுக்கு கொடுத்த சவுக்கடியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ராஜாவிற்கு கொடுத்த இந்த ராஜ மரியாதையை பலரும் சமூக வலைத்தளத்தில் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா கடந்த 1970-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரிசா எனப் பல இந்திய பிராந்திய மொழிகளிலும் 1௦௦௦க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அந்தப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து முறை தேசிய விருதும், மூன்று சர்வதேச விருதுகளும், ஆறு தமிழ்நாடு அரசு விருதுகளும் உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

அது மட்டுமல்லாது மத்திய அரசின் ‘பத்ம பூஷன், பத்ம விபூஷன்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ பட்டத்தையும் பெற்றுள்ளார். ஏற்கனவே கேரள அரசு 2016-ஆம் ஆண்டு இளையராஜாவிற்கு கலைக்கு தொண்டு ஆற்றியவர்களுக்கு வழங்கும் ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ என்ற விருதை வழங்கி கௌரவித்து இருந்தது. தற்போது ‘ஹரிவராசனம்’ விருது இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

click me!