
பாலிவுட்டில் எப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகைகள் சோனம் கபூர் மற்றும் ஆலியா பட். இவர்கள் இருவரும் ட்விட்டரில் ஓரின செயற்கை குறித்து தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இது குறித்துப் பேசத் துவங்கியதன் காரணம்... டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் பேசிய குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் ஒரு மாணவர் ஓரின சேர்க்கையாளரான தன்னை மற்றவர்கள் தவறாக நடத்துவதைத் தவிர்ப்பது எப்படி என ஒரு கேள்வியை முன்வைத்துளார்.
அதற்கு "நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள், அப்போது தான் உங்களால் எதிர்த்து நிற்க முடியும். மேலும் இது நிரந்தரமான ஒன்று அல்ல. சிலர் ஆரம்பத்தில் ஓரினசேர்க்கையாளராக இருந்து பின்னர் மாறியுள்ளதை நான் பார்த்துள்ளேன்," என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூர் "ஓரினச் சேர்க்கை என்பது பிறக்கும்போதே வருவது அது மாறாது" என ட்விட்டரில் கூறியுள்ளார்.
அதே போல ஆலியா பட்டும் சோனம் கபூருக்கு ஆதரவாக டிவிட்டர் போட்டு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.