நடிகர் அதர்வா மீது மோசடி புகார்..! திரையுலகில் பரபரப்பு..!

Published : Nov 12, 2019, 05:59 PM IST
நடிகர் அதர்வா மீது மோசடி புகார்..! திரையுலகில் பரபரப்பு..!

சுருக்கம்

வாரிசு நடிகராக அறிமுகமாகி, சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளவர் நடிகர் அதர்வா முரளி. இதுவரை எந்த ஒரு கிசு கிசுவில் கூட சிக்காமல், இருந்து வரும் இவர் மீது, திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் பண மோசடி புகார் கொடுத்துள்ள விஷயம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு நடிகராக அறிமுகமாகி, சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளவர் நடிகர் அதர்வா முரளி. இதுவரை எந்த ஒரு கிசு கிசுவில் கூட சிக்காமல், இருந்து வரும் இவர் மீது, திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் பண மோசடி புகார் கொடுத்துள்ள விஷயம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விநியோகஸ்தர் மதியழகன் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், அதன் படி தனக்கு ரூ.5.5 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?