Director Bharathiraja : திரையுலகினரை விடாமல் துரத்தும் கொரோனா... இயக்குனர் பாரதிராஜாவுக்கும் தொற்று உறுதி

Ganesh A   | Asianet News
Published : Jan 31, 2022, 11:23 AM IST
Director Bharathiraja : திரையுலகினரை விடாமல் துரத்தும் கொரோனா... இயக்குனர் பாரதிராஜாவுக்கும் தொற்று உறுதி

சுருக்கம்

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தாண்டு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்தது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டன. இது ஒருபுறம் இருந்தாலும், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த இரு மாதங்களில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், விஷ்ணு விஷால், மகேஷ் பாபு, வடிவேலு, சிரஞ்சீவி, மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோரும். நடிகைகள் குஷ்பு, மீனா, திரிஷா, ஷோபனா, ஷெரின், கஜோல், ஜான்வி கபூர் ஆகியோரும் கொரோனாவின் பிடியில் சிக்கி பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!