தனுஷ் பட வில்லன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 15, 2021, 7:16 PM IST
Highlights

இந்நிலையில் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

 இரண்டாவது முறையாக தன்னுடைய  கோரத்தாண்டவத்தை துவங்கியுள்ள கொரோனாவின் பிடியில் இதுவரை, ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட், மாதவன், அக்‌ஷய் குமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌரி கிஷன், என அடுத்தடுத்து பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போது மலையாள திரையுலகில் பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் டொவினோ தாமஸ், 2018ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்த லூசிபர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்தார். 

பன்மொழியில் உருவாகி உள்ள மின்னல் முரளி படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது என பதிவிட்டுள்ளார். 

click me!