
சூப்பர் ஸ்டார் நடித்த கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன் தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் டெல்லியில் நடைபெற்ற மன அழுத்தம் குறித்த நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார்.
பின் இதில் இவர் பேசுகையில் ‘சில ஆண்டுகளுக்கு முன் தானும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் என்றும் , இதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது.
தனி அறையில் இருக்கும் போது மிகவும் மனம் நொந்து இருப்பேன், தனிமையிலேயே காலத்தை கடந்தேன்’ என கூறும் போது அவர் மேலும் பேச முடியாத அளவிற்கு தீடீர் என தேம்பி அழுதார்.
இதனால் அதில் கலந்து கொண்ட அவரது ரசிகர்களும், பொது மக்களும் அதிர்ச்சி அடித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.