
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இது பற்றி தெரிந்ததும், அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, மதுமிதா, கவின், சாண்டி ஆகியோர் தேம்பி தேம்பி அழுகின்றனர். மேலும் என்ன காரணம் பிக்பாஸ் என அணைத்து போட்டியாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ மூலம் தெரிகிறது.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், மது உண்மையில் அழுவது போல் தெரியவில்லை என, கூறியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சதீஷ். ஏற்கனவே இன்றைய ப்ரோமோவில், பிக்பாஸ் அறிவிப்பதற்கு முன்பே கவினும் சாண்டியும் தலையில் கையை வைத்து அழ ஆரமித்து விட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து கூறி வந்த நிலையில், பிரபலம் ஒருவரும், இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.