லட்சக்கணக்கானோரை கவலை மறந்து சிரிக்கவைத்தவர் சீனு...கிரேசி மோகன் கண்ணீர்...

By sathish kFirst Published Dec 27, 2018, 1:21 PM IST
Highlights

இன்று அவரது திடீர் மறைவை ஒட்டி  கிரேசி மோகன் வெளியிட்ட அறிக்கையில் ’கிட்டத்தட்ட 30 வருடங்களாக எங்களது நாடகக் குழுவில் பணியாற்றியவர் சீனு. இன்று காலை அவர் இறந்த செய்தி கேட்டு நெஞ்சு கனத்துக்கிடக்கிறது.

தனது கிரேசி நாடகக்குழுவின் ஆஸ்தான நடிகர்களுல் ஒருவரான சீனு மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன்.

துவக்கத்தில் கிரேசி மோகனின் நாடகக்குழுவில் முக்கிய நடிகராக இருந்த சீனுமோகன் ‘வருஷம் 16’ படத்தின் மூலம் இயக்குநர் ஃபாசிலால் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தாலும் சீனு மோகனின் ஆர்வம் நாடகங்களில் நடிப்பதிலேயே இருந்தது. கிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான ’மர்மதேசம் ரகசியம்’, ‘மாது ப்ளஸ் டூ’,’மதில்மேல் மாது’,’மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘ரிடர்ன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்’ ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்தார் சீனு.

இன்று அவரது திடீர் மறைவை ஒட்டி  கிரேசி மோகன் வெளியிட்ட அறிக்கையில் ’கிட்டத்தட்ட 30 வருடங்களாக எங்களது நாடகக் குழுவில் பணியாற்றியவர் சீனு. இன்று காலை அவர் இறந்த செய்தி கேட்டு நெஞ்சு கனத்துக்கிடக்கிறது.

1979ல் கிரேசி குழுவுக்குள் வந்த எங்கள் ஒவ்வொருவரின் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது அற்புதமான நடிப்பால் லட்சக்கணக்கானோரை கவலை மறந்து சிரிக்கவைத்தவர். அவரது ஆத்மா பூரண சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறோம்’ என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

click me!