சீரியல் நடிகை நவ்யாவை தொடர்ந்து, அவருடன் நடித்த நடிகருக்கும் கொரோனா..! அச்சத்தில் சின்னத்திரை..!

By manimegalai aFirst Published Jul 4, 2020, 6:16 PM IST
Highlights

நாடு முழுவதும் கொரானா வைரஸை கட்டு படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதன் தாக்கல் ஏக்க சக்கமாய் எகிறி வருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் தமிழகத்தில், 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

நாடு முழுவதும் கொரானா வைரஸை கட்டு படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதன் தாக்கல் ஏக்க சக்கமாய் எகிறி வருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் தமிழகத்தில், 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அதிகம் பரவி வந்தாலும், தமிழகத்தில் உயிர் சேதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தினமும் கொரோனா தொற்றில் இருந்து பலர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், 'வாணி ராணி' சீரியலில் பூஜா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து, பிரபலமான நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பது. இதனால் சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், சீரியல் நடிகர்களின் வாழ்வாதாரம் மற்றும் திரையுலகை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, சீரியல் பணிகள், உரிய பாதுகாப்புடன் மொத்தம் 60 பேருடன் இயங்க அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு தொலைக்காட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் தமிழில் நடிகை ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி, ரன்  உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர். 

தமிழை தவிர, அமே  கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் இவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நவ்யா தனிமை படுத்தப்பட்டார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், சத்தனான உணவுகளை எடுத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முடிந்த வரை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வந்தாலும் பயம் வேண்டாம், முறையான சிகிச்சை எடுத்து கொண்டாலே போதும் என தெரிவித்து, தன்னுடன் பழகிய அனைவரும் கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இவருடந்த 'நா பேரு மீனாட்சி' சீரியலில் இணைந்து  நடித்து வந்த, நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 3 நாட்களாக தனிமையில் இருப்பதாகவும், கடவுளின் அனுகிரஹத்தால் நலமுடன் உள்ளதாகவும், யாரால் தனக்கு கொரோனா தொற்று வந்தது என்பது பற்றி கவலை இல்லை. என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனால் அந்த சீரியலில் நடித்த பலர் அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!