கந்து வட்டி கேட்டு மிரட்டல்... பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா கைது..!!

 
Published : Jul 25, 2017, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
கந்து வட்டி கேட்டு மிரட்டல்... பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா கைது..!!

சுருக்கம்

cinema financier bothra arrested

பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா, கந்து வட்டி கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போத்ரா, தமிழ் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். இவரிடம் சதீஷ்குமார் என்பவர் பைனான்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. சதீஷ்குமாரிடம் இருந்து மேலும் பணம் பெறும் எண்ணத்தில் அவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியுள்ளார் போத்ரா. அவரது மகன் ஜெகன் போத்ராவும் சதீஷ்குமாரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராக மோசடி வழக்கை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் சினிமா பைனான்சியர் போத்ரா. அதேபோல், ஐஜேகேவின் தலைவர் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாகவும் புகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து, சதீஷ்குமார், கந்துவட்டி கேட்டு தன்னை மிரட்டி வருவதாக போத்ரா மீது புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ராவை இன்று கைது செய்தது. மேலும் போத்ராவின் மகன் ஜெகன் போத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?