
காலா திரைப்பட வழக்குத் தொடர்பாக நடிகர் ரஜினி, இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் ஆகிய மூவரும் ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் கெடு வைத்துள்ளது.
ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
காலா படத்தின் தலைப்பு மற்றும் கதை தன்னுடையது எனவும், 1996-ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தில் அவற்றை பதிவு செய்து விட்டதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி தமிழரசி, இது தொடர்பாக பதில் அளிக்க எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஜூன் 23-ஆம் தேதிக்குள் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் ஆகிய மூவரும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.