
தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் அனைவரது இதயங்களிலும் இடம் பிடித்த நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலையில் பின்னடைவை சந்தித்தார். சிறிது கால இடைவெளிக்கு பின்னர் அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். ரோபோசங்கர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் படபிடிப்பு தளத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நீர்சத்து குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் ரோபோ சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது கல்லீரல் முழுமையாக செயல் இழந்த காரணத்தால் அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு ரோபோசங்கர் காலமானதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகர் தனுஷ், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று நள்ளிரவிலேயே ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.