பட வாய்ப்பு இல்லாததால் ஆடு மேய்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட பிந்துமாதவி..!

First Published Apr 6, 2018, 10:37 AM IST
Highlights
binthu madavi taking care of goat in her hometown


பட வாய்ப்பு இல்லாததால் ஆடு மேய்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட பிந்துமாதவி..

தமிழ்த்திரை துறையில் தற்போது ஸ்ட்ரைக் நடந்து வருவதால், நடிகை நடிகைகள் ரொம்ப ப்ரீயா நேரத்தை தன் சொந்த ஊர்களில் சொந்தங்களோடு செலவிடுகிறார்கள்.

நடிகர் விக்ரம் கேரளாவில் தனது குடும்பத்தினருடன் என்ஜாய் செய்து வருகிறார்.இதே போன்று நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் சொந்த மாநிலமான கேரளாவிற்கு சென்று உள்ளார்.

கொச்சியில் உள்ள அவரது வீட்டில்,அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

காமெடி நடிகர் கருணாகரன், இப்படி சும்மா இருந்தா,இப்படியே சும்மா இருக்க பழகி விடும் என தனக்கே உண்டான காமெடி கலந்த தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஆடு மேய்க்கும் பிந்து மாதவி...!  

இந்நிலையில் நடிகை பிந்துமாதவி அவரது சொந்த கிராமத்திற்கு சென்று,ஆடு மேய்த்து உள்ளார்.

ஆந்திரபிரதேசதிலுள்ள தேவரிந்துப்பள்ளி தான் பிந்துமாதவிக்கு சொந்த ஊர்.அங்கு சென்று ஆடு மேய்ப்பது,மண்பானையில் சமைப்பது குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது என மகிழ்ச்சியாக காலத்தை கழித்து வருகிறார் பிந்துமாதவி.

மேலும்,நகர வாழ்கையில் இருந்து கிராமத்து வாழ்க்கை அனுபவித்து மனதிற்கு  நிம்மைதியையும்  மகிழ்ச்சியையும் தருகிறது என்று  தெரிவித்து உள்ளார் பிந்துமாதவி.  

click me!