காயினை கொடுத்து கொளுத்தி போட்ட பிக்பாஸ்..! முட்டி மோதும் போட்டியாளர்கள்..!

By manimegalai aFirst Published Oct 19, 2021, 7:11 PM IST
Highlights

பிக்பாஸ் (  வீடு கடந்த இரண்டு வாரங்களாக அமைதியாக சென்றாலும் இனி வரும் நாட்களில் பிரச்சனைக்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் விதமாகவே இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு வாரங்களாக அமைதியாக சென்றாலும் இனி வரும் நாட்களில் பிரச்சனைக்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் விதமாகவே இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவிலும், அதிகம் போகஸ் செய்ய பட்டவர் அபிஷேக் தான். தற்போது பிக்பாஸ் புதிய டாஸ்காக, 5 நாணயங்களை கொடுத்துள்ளது. இந்த நாணயங்களை கொடுத்துள்ளது. இதில் அதிக தொகை கொண்ட நாணயம் வைத்திருப்பவர் இந்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற படுவார் என கூறுகிறார். எனவே இதனை திருட்டு தனமாக எடுக்க பெண் போட்டியாளர்கள் முதல் ஆண் போட்டியாளர்கள் வரை போட்டி போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் அபிஷேக் மற்றும் சிபி ஆகியோர் முட்டி மோதி கொள்வது தெரிகிறது. அபிஷேக் மிகவும் கோவமான ‘நான் சொல்வதை மட்டும் எல்லோரும் கேளுங்கள், பிக்பாஸ் என்பது சென்டிமென்ட்டுக்கு இடமில்லாத ஒரு விளையாட்டு, இது முழுக்க முழுக்க ஒரு மைண்ட் கேம்’ என்று கூறுகிறார். எது சரி, எது தப்பு என்பதையெல்லாம் பார்க்க கூடாது என பேசும் அவரிடம், சிபி சக்கரவர்த்தி காரம் சாரமான விவாதத்திலும் ஈடுபடுகிறார்.

யார் யார்? அந்த காயினை எடுத்து வைத்துள்ளார்கள் என்பதை அபிஷேக் நோட்டமிட்டதால் தான் எந்த பிரச்சனை வருவது தெரிகிறது. எப்படியோ... பிக்பாஸ் 5 காயினை கொடுத்து, போட்டியாளர்களுக்குள் கொளுத்தி போட்டுவிட்டுள்ளார். எந்த அளவிற்கு பிரச்சனை அனல் விட்டு எரிகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

of - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/BXrYqsfGfT

— Vijay Television (@vijaytelevision)

click me!