இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது இரண்டுபேரா? இம்முறையும் தப்பிக்கிறாரா ஐஸ்வர்யா?

By vinoth kumarFirst Published Sep 23, 2018, 11:21 AM IST
Highlights

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியின் பரபரப்பை கூட்ட பிக் பாஸ் எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்கிறார். அதனால் தானோ என்னவோ தாறுமாறான டாஸ்குகளை அள்ளி கொடுத்து போட்டியாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படுத்தி பார்த்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியின் பரபரப்பை கூட்ட பிக் பாஸ் எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்கிறார். அதனால் தானோ என்னவோ தாறுமாறான டாஸ்குகளை அள்ளி கொடுத்து போட்டியாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படுத்தி பார்த்தார் பிக் பாஸ். போட்டியாளர்களோ வழக்கம் போல நல்லவர்களாகவே இருக்க, ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் மீண்டும் பிக் பாஸின் செல்ல மகளாக அவரின் எதிர்பார்ப்பின் படியே ,வரிந்துகட்டிக்கோண்டு தன் சண்டை போட்டு டி.ஆர்.பி-ஐ எகிற வைத்து வந்தார். 

நிலமை இப்படி இருக்க இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பேர் எலிமினேட் ஆவார்கள் என்று முன்னரே பிக் பாஸில் கமல் அறிவித்திருந்தார். அந்த லிஸ்டில் ஐஸ்வர்யாவின் பெயரும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்பது பிக் பாஸ் ரசிகரகளின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் இந்த வார எவிக்ஷன் குறித்து வெளியாகி இருக்கும் தகவல் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

 

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு பாலாஜி மற்றும் யாஷிகா தான் வெளியேறி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் யாஷிகா வெளியேறி இருப்பது குறித்து எதுவும் உறுதியாக சொல்லப்படவில்லை. ஆனால் பாலாஜி வெளியேறி இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் இந்த முறை எதிர்பாராத போட்டியாளர்கள் தான் வெளியேறி இருக்கிறார்கள். 

தற்போது அந்த லிஸ்டில் பாலாஜியின் பெயரும் சேர்ந்திருக்கிறது. இதில் யாஷிகா வெளியேறுவதில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு சந்தோஷம் தான் ஆனால் ஐஸ்வர்யா மீண்டும் மீண்டும் தப்பிப்பது தான் அனைவருக்கும் எரிச்சலூட்டுவதாக அமைந்திருக்கிறது.

click me!