
சமீபத்தில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, மத்திய அரசின் நீட் தேர்வு திணிப்பால் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பு படிக்க முடியாததை நினைத்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மாணவர்கள் அனைவருக்கும் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்வது என பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இந்தப் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிந்த நடிகர் அரவிந்த் சாமி, தமிழக அரசு நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவது மிகச் சிறந்த விஷயம். ஆனால் இந்தத் திட்டத்திற்கும் அம்மா என்று பெயர் வைக்காமல். அனிதா என்று பெயர் வையுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது மாணவி அனிதாவால் நிகழ்ந்த மாற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.