
நடிகை அனுஷ்கா ஆயிரம் கிசுகிசுக்களில் சிக்கினாலும் அதைப் பற்றி சற்றும் சட்டை செய்யாமல் தரமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், அவர் கூறியுள்ளவை:
சினிமாத் துறையில் பல சிறந்த கதாநாயகிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட முடியும்.
மேலும் பல திறமையான நடிகைகள் இருந்தும் ஒரு சில நல்ல படங்கள் என்னுடைய திறமையை வெளிக் கொண்டுவந்து நடிக்கும் படி அதிர்ஷ்டவசமாக அமைந்தது. இப்படிப் பட்ட படங்களை நான் ஒரு வேளை தவற விட்டிருந்தால் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பேன்.
நான் நடித்ததில் முக்கியமான படங்களாக நான் கருதுவது, அருந்ததி, ருத்ரமா தேவி, இஞ்சி இடுப்பழகி மற்றும் பாகுபலி ஆகிய படங்கள். இந்த அனைத்துத் திரைப்படங்களிலும் உயிரையே கொடுத்து உழைக்கும் இயக்குனர்களுடன் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்.
ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கதையம்சம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். அது முன்னணி கதாநாயகனின் படமாக இருந்தாலும்...! என்று தன்னுடைய மனதில் பட்டதை ஆணித்தரமாக அடித்துக் கூறியுள்ளார் அனுஷ்கா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.