ராஜமௌலிக்காக 3 நிமிடத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா!

Published : May 12, 2019, 12:14 PM ISTUpdated : May 12, 2019, 12:15 PM IST
ராஜமௌலிக்காக 3 நிமிடத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா!

சுருக்கம்

நடிகை அனுஷ்கா - பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பாகுபலி'. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே அவர்களது திரை வாழ்வில் மிக பெரிய திருப்பு முனையாக இப்படம் அமைந்தது.  

நடிகை அனுஷ்கா - பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'பாகுபலி'. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே அவர்களது திரை வாழ்வில் மிக பெரிய திருப்பு முனையாக இப்படம் அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, இவருக்கு சீரியஸாக திருமணம் செய்து வைக்க இவருடைய பெற்றோர் முயற்சி செய்தும், இன்னும் இவரின் மனதிற்கு பிடித்த மாப்பிளை மட்டும் கிடைக்க வில்லை. இவருடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக, பல பூஜைகளும் நடத்தினர் ஆனால் எந்த பயனும் இல்லை.

இதனால், கொஞ்ச நாட்கள் திரையுலகை விட்டு விலகியே இருந்த அனுஷ்கா தற்போது, மீண்டும் 'சைலென்ஸ' என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்புரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ராஜமௌலி, இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?