எனக்கு மாப்பிள்ளை பாருங்கள்! பிரபல இயக்குனரிடம் கூறிய தமன்னா!

Published : Jun 02, 2019, 04:06 PM ISTUpdated : Jun 02, 2019, 04:08 PM IST
எனக்கு மாப்பிள்ளை பாருங்கள்!  பிரபல இயக்குனரிடம் கூறிய தமன்னா!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின், வெயிட்டான கதாப்பாத்திரத்தை மட்டுமே குறி வைத்து நடித்து வருகிறார்.  

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின், வெயிட்டான கதாப்பாத்திரத்தை மட்டுமே குறி வைத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் 'தேவி' வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதே குழுவினர் இரண்டாம் பாகத்தை எடுப்பதிலும் இறங்கினர். 

அதன்படி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தமன்னா, பிரபுதேவா, நந்திதா, ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் 'தேவி 2 ' திரைப்படம் வெளியானது.  முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ஆனால் படத்தில் காமெடி காட்சியில் தமன்னா தூள் கிளப்பியுள்ளார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். 

இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம்,  திருமணம் குறித்து கேள்வி  எழுப்பியபோது, எனக்கு ஏற்ற போல் மாப்பிள்ளை கிடைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வேன். இயக்குனர் ஏ.எல். விஜயிடம் கூட தனக்கு ஏற்ற போல் மாப்பிள்ளை இருந்தால் பார்த்து சொல்லுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது