கட்டப்பஞ்சாயத்து செய்து அஜித்திடம் ரூ.2 கோடி பறிக்கப்பட்டதா..? புது சர்ச்சை 

 
Published : Dec 23, 2017, 08:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
கட்டப்பஞ்சாயத்து செய்து அஜித்திடம் ரூ.2 கோடி பறிக்கப்பட்டதா..? புது சர்ச்சை 

சுருக்கம்

ajith pay 2 crores for kattapanjayat person

தமிழ் சினிமாவில் கடத்த சில வருடங்களாகவே கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பிரச்சனைகள் தலை விரித்தாடுவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னையில் சிக்கிதான் சமீபத்தில் தயாரிப்பாளர் அசோக் குமார் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் அருள்பதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் குறித்து பேசுவதற்காக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அப்போது, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் 'அருள்பதி' பல வருடங்களாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் வாங்கியவர் என்றும், ஏன் தற்போது கோலிவுட் திரையுலகில் மிகப் பெரிய நடிகராக இருக்கும் அஜித்திடம் கூட கட்டப்பஞ்சாயத்து செய்து 2 கோடி ரூபாய் வாங்கியதாகவும் தெரிவித்தார். ஞானவேல் ராஜா தற்போது இப்படிக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்