காப்பாற்றிய யாஷிகாவிடம் வரிந்து கட்டி சண்டைக்கு போகும் ஐஸ்வர்யா!

By Maruthu Pandi SanthosamFirst Published Sep 7, 2018, 2:11 PM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது தற்போது தான் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. 85 நாட்கள் கழித்து இப்போது தான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையானாக விளையாடி வருவதாக பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது தற்போது தான் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. 85 நாட்கள் கழித்து இப்போது தான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையானாக விளையாடி வருவதாக பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில், தன்னை காப்பாற்றி வரும் யாஷிகாவையே எதிர்த்து காட்டு கத்து கத்துகிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் அருகில் வந்து யாஷிகா, "நீ செய்யும் தப்புக்கு அடுத்தவங்களை சம்மந்தப்படுத்தி பேசாதே என கூறுகிறார். இதனால் கோவமான ஐஸ்வர்யா... யாஷிகாவிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போகிறார். 

பின் யாஷிகா உங்களுக்காக தான் நான் அவர்களிடம் சென்று பேசியதாக கூறுகிறார். இதற்கு ஐஸ்வர்யா பேய் பிடித்தது போல் ஆமாம் நான் பொய் சொல்கிறேன் என காத்துகிறார். இவரின் பேச்சால் டென்ஷன் ஆன யாஷிகா, நீ இங்கிருந்து போ என கூறுகிறார். ஆனால் ஐஸ்வர்யா நான் ஏன் போகவேண்டும் நீ போ என கூறுகிறார்.

ஒட்டு மொத்தத்தில் இன்று தான் யாஷிகாவுக்கு ஐஸ்வர்யாவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று கூறலாம். இந்த சண்டையின் மூலம் இணை பிரியாத தோழிகள் போல் இருந்த இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது இதில் சென்று முடியும் என பொறுத்திருந்து பார்க்கலாம். 

click me!