
’சினிமா என்பது முழுக்க முழுக்க கற்பனை சம்பந்தப்பட்டது. எனவே படம் பார்க்கச் செல்லும் மாணவிகள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, அதன் தாக்கங்களை தியேட்டர் வாசலிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும்’என்று நடிகை த்ரிஷா மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நடிகை த்ரிஷா யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் மூவாயிரம் பேர் வரை கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு திரிஷா பொறுமையாகப் பதில் அளித்தார்.
கேள்வி பதில் பகுதியின் நிறைவில் சிறிய உரை ஆற்றிய த்ரிஷா,’ பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். முக்கியமாக இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது. கல்லூரி மாணவிகள் படம் பார்க்கச்செல்லும்போது அப்படத்தினால் ஏற்படும் தாக்கங்களை தியேட்டர் வாசலோடு விடுவிட்டு வந்துவிடவேண்டும்’என்று பேசினார் த்ரிஷா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.