பிரபல நடிகை மரணம்...! குளிக்கும் போது நீரில் மூழ்கியதால் நிகழ்ந்த சோகம்...!

First Published Apr 19, 2018, 2:42 PM IST
Highlights
actress thusvani died in srilanka


குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இலங்கையை சேர்ந்த நடிகை துஷானி சில்வா. இலங்கையில் பிரபல நாடக நடிகையாகவும்,சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் தான் துஷானி

மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டு உள்ளவர் இவர்.

இந்நிலையில் கினிகத்தேனை யடிபேரியா பகுதியில் உள்ள களனி கங்கைக்கு குளிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளார்

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலத்தையும் பறிமுதல் செய்தனர்

இந்த சம்பவத்தால் அவருடைய திரை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள்  ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

click me!