எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விட்டு வெளியேறிய பிரிடிஷ் நடிகைக்குப் பதிலாக அந்த கேரக்டரில் சாய் பல்லவி நடிப்பதாக வந்த செய்திகள் சுத்த கப்ஸா என்று மறுக்கிறார் அவர்.
எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விட்டு வெளியேறிய பிரிடிஷ் நடிகைக்குப் பதிலாக அந்த கேரக்டரில் சாய் பல்லவி நடிப்பதாக வந்த செய்திகள் சுத்த கப்ஸா என்று மறுக்கிறார் அவர்.
’பாகுபலி 2’வின் இமாலய வெற்றிக்குப் பின்னர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரிட்டன் நடிகை தேசிகர் ஜோன்ஸ் என்பவர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து டெய்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒருவார காலமாக நடிகை சாய் பல்லவி அந்த கேரக்டரில் கமிட் பண்ணப்பட்டுள்ளதாகவும் அதற்காக முதல் முதலாக பெரிய தொகையை சம்பளமாக வாங்கியிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.