
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமகாக அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும், கரை புரண்டு ஓடும் வெள்ளம், மண் சரிவால் ஏற்பட்ட சேதம், வீடுகள் இடிந்து விழுந்து பலர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் தற்போது கேரளா மாநில மக்களுக்கு உதவ ராணுவம், மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதனால் பலர் தானாக முன்வந்து, பணமாகவும், பொருட்களாகவும் அங்கு உள்ள மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு பிரபல தெலுங்கு நடிகை மெஹரீனின் ரசிகர்கள் பக்க சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் உண்மையில் இந்த பதிவை மெஹரீன் போடவில்லையாம், யாரோ ஒருவர் இவருடைய பெயரை பயன்படுத்தி, கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என பணம் கேட்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட மெஹரீன் "எதற்காக என் பெயரை பயன்படுத்தி பணம் கேட்கிறீர்கள்... உதவ வேண்டும் என்றால் அவர்களாக செய்யட்டும் என கோபமாக கூறியுள்ளார்"
மெஹரீன் தமிழில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய "நெஞ்சில் துணிவிருந்தால்" படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.