
பிரபல தெலுங்கு நடிகை கிம்சர்மா மீது ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் திலீப் குமார் என்பவர் தன்னுடைய ஆடம்பர சொகுசு காரை அபகரித்து விட்டதாக மும்பை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை கிம்சர்மா வீட்டில் தன்னுடைய காரை நிறுத்தி வைத்திருந்ததாகவும் அதை அவர் அபகரித்து பயன்படுத்தி வருவதாகவும் தன்னுடைய காரை அவரிடமிருந்து மீட்டு தரும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் நடிகை கிம்சர்மாவின் கணவர் அலிபுஞ்சானி மீது கார் அபகரிப்பு புகாரை தெரிவித்திருந்த இவர் தற்போது அவருடைய பெயரை தவறாக கூறி விட்டதாகவும், கிம்சர்மாதான் தன்னுடைய காரை அபகரித்து வைத்து இருக்கிறார் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போது கிம்சர்மா வெளியூரில் இருப்பதால் இவர் மும்பை திரும்பியதும் இவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.