முத்த காட்சிக்கு ஒன் மோர் கேட்ட நடிகை அதுல்யா..! அனைவர் மத்தியிலும் போட்டுடைத்த பிரபலம்..!

By manimegalai aFirst Published Dec 9, 2019, 12:07 PM IST
Highlights

தமிழ் சினிமாவில், தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக தமிழ் பேசும், தமிழகத்தை சேர்ந்த நடிகைகளின் வருகை கோலிவுட் சினிமாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 

தமிழ் சினிமாவில், தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக தமிழ் பேசும், தமிழகத்தை சேர்ந்த நடிகைகளின் வருகை கோலிவுட் சினிமாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தன்ஷிகா, இந்துஜா, அதுல்ய ரவி என சொல்லிக்கொண்டே போகலாம்.

'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'ஏமாலி', 'நாகேஷ் திரையரங்கம்', 'அடுத்த சாட்டை' என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் 'கேப்மாரி'. 

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின், செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகை அதுல்யா நடிப்பின் மீது மிகவும் அர்ப்பணிப்போடு உள்ள நடிகை என கூறினார்.

உதாரணமாக படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றையும் கூறினார். ஜெய்க்கும் - அதுல்யாவிற்கும் இந்த படத்தில் முத்த காட்சி ஒன்று உள்ளது. கேமராவில் அந்த காட்சியை பார்த்த அதுல்யா, சரியாக வரவில்லை எனவே, மீண்டும் முத்த காட்சிக்கு ஒன் மோர் போகலாம் என கூறியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

அனைவர் மத்தியிலும் இதை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதும், முகம் சிவக்க சிறிது சமாளித்தார் அதுல்யா.

click me!