சொத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டார் நடிகர் சரத் பாபு! பிரபல நடிகை பரபரப்பு புகார்!

By manimegalai aFirst Published Feb 5, 2019, 1:36 PM IST
Highlights

நடிகர் சரத் பாபு தன்னுடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொண்டதாக அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரமா பிரபா அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  
 

நடிகர் சரத் பாபு தன்னுடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொண்டதாக அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரமா பிரபா அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  

தமிழில் 1977 ஆம் ஆண்டு 'பட்டின பிரவேசம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு.  இவர் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்த படமான "முள்ளும் மலரும்" இருவருவருடைய திரைவாழ்விலும்  மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார் சரத் பாபு. அதே போல் ரஜினி, கமல் ஆகியோரோடு இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் 1981 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகை ரமா பிரபுவை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்க வில்லை. 1988 ஆம் ஆண்டு, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் தற்போது ரமா பிரபா, நடிகர் சரத் பாபு தன்னை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார். 

இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள சரத் பாபு... ரமா பிரபாவிற்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீடு இருந்தது. எக்மோர்ரில் இருந்த மற்றொரு வீடு சிக்கலில் இருந்தது. அதை அவர் முதல் கணவரிடம் இருந்து வாங்கினார் என தெரியவந்தது. பிறகு தன்னுடைய விவசாய நிலங்களை விற்று அவருக்கு உமாபதி தெருவில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். அவரின் மற்ற வீடுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். அவருக்கு கொடுத்த என்னுடைய வீட்டை தான் நான் திரும்ப எடுத்து கொண்டேன் என கூறினார். இருப்பினும் இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கடும் வாங்குவதை ஏற்படுத்தியுள்ளது. 

click me!