முற்றிலும் பொய்..! அடிச்சு பிடிச்சு ட்விட் போட்ட மாதவன்..! நிம்மதியான ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Nov 19, 2019, 1:05 PM IST
Highlights

'அலைபாயுதே'  படத்தின் மூலம் தமிழில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் மாதவன். இந்த படத்தின் வெற்றியை தொடந்து, 'என்னவளே', 'மின்னலே', 'டும் டும் டும்', 'ரன்' போன்ற பல காதல் படங்களில் நடித்து, பெண் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

'அலைபாயுதே'  படத்தின் மூலம் தமிழில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் மாதவன். இந்த படத்தின் வெற்றியை தொடந்து, 'என்னவளே', 'மின்னலே', 'டும் டும் டும்', 'ரன்' போன்ற பல காதல் படங்களில் நடித்து, பெண் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

தமிழை தவிர, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மாதவன். மேலும் 'வேட்டை' படத்திற்கு பின் சில வருடங்கள் ஒரு சில காரணங்களால், தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மாதவன், 'இறுதி சுற்று' படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

இந்த படத்திற்கு பின், மிகவும் முதிர்ச்சியான வேடங்களையும்... கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா', சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.

தற்போது, இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தில், நம்பி நாராயணனாக நடித்து வருகிறார் மாதவன். இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் நிசப்தம், மாறா, ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க, 29 வயது தெலுங்கு நடிகர் வருண் தேஜுக்கு அப்பாவாக மாதவன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி தீயாக பரவியது. இதை பற்றி அறிந்த மாதவன் இது முற்றிலும் பொய், நான் இன்னும் சின்ன பையன் தான் என கிண்டலாக, அடித்து பிடித்து ட்விட் போட்டுள்ளார்.

ஏற்கனவே, இவ்வளவு பெரிய நடிகருக்கு மாதவன் அப்பாவாக, நடிக்கிறார் என செய்தியை அறிந்து ஷாக் ஆன ரசிகர்களுக்கு, மாதவனின் இந்த பதில் நிம்மதியடைய செய்துள்ளது எனலாம்.
 

Totally fake bro. 🙈🙈I am still a kid man .. 🤪🤪🤪 https://t.co/plGzwCRsFf

— Ranganathan Madhavan (@ActorMadhavan)

click me!