இந்த நெருக்கடி நேரத்தில்... அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய காத்திருக்கிறேன்! கமலின் அதிரடி ட்விட்!

Published : Mar 25, 2020, 04:01 PM IST
இந்த நெருக்கடி நேரத்தில்... அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய காத்திருக்கிறேன்! கமலின் அதிரடி ட்விட்!

சுருக்கம்

கொரோன வைரஸின் தாக்கம் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நடிகர் கமலஹாசன் தொடர்ந்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வீடியோ மற்றும், ட்விட்டர்  பதிவிட்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.  

கொரோன வைரஸின் தாக்கம் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நடிகர் கமலஹாசன் தொடர்ந்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வீடியோ மற்றும், ட்விட்டர்  பதிவிட்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே, பாரத பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறித்து,  உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.

 

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என்று, ஏழைகள் படும் பாட்டினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். 

இதை தொடர்ந்து தற்போது அரசு அனுமதி கொடுத்தால், தன்னுடைய வீட்டையே மருத்தும மனையை மாற்றி உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள, "இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன. அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். என ட்விட் போட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!