Nayanthara Wedding : நயன்தாரா திருமணத்துக்கு ஆப்சென்ட் ஆன அஜித்... குழந்தைகளுடன் ஷாலினி மட்டும் பங்கேற்பு

Published : Jun 09, 2022, 01:44 PM IST
Nayanthara Wedding : நயன்தாரா திருமணத்துக்கு ஆப்சென்ட் ஆன அஜித்... குழந்தைகளுடன் ஷாலினி மட்டும் பங்கேற்பு

சுருக்கம்

Nayanthara Vignesh Shivan wedding : திருமணத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகை நயன்தாரா திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது பேவரைட் ஹீரோவான அஜித்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் நடிகை நயன்தாரா. இதனால் அவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த திருமணத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், ஷாலினியின் சகோதரி ஷாமிலி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதேபோல் நடிகர் சூர்யாவும் தனது காதல் மனைவி ஜோதிகாவுடன் வந்து நயன்தாராவின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். நடிகர் விஜய் இன்று மாலை 4 மணியளவில் இந்த விழாவில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. அவரும் வருவாரா அல்லது அஜித்தைப் போல் ஆப்சண்ட் ஆவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  பலாப்பழ பிரியாணி முதல் பாதாம் அல்வா வரை.... கம கமக்கும் விக்கி - நயனின் திருமண விருந்து - மெனு லிஸ்ட் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?