
கடந்த 2001 புதிய நீதி என்கிற கட்சியை துவங்கியவர் அந்த கட்சியின் தலைவர் ஏ.சி.ஷண்முகம். மேலும் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.
சமீபத்தில் நடந்த நாடாளு மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளராக வேலூர் மாவட்டத்தில் போட்டியிட இருந்த இவர், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், போட்டியிடமுடியாமல் போனது.
இந்நிலையில் ஏ.சி.சண்முகத்தின் மகன் ஏ.சி.எஸ். அருண்குமாரும் , ஏ.சி.சண்முகத்தின் சகோதரரும், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர். ஏ.சி.எஸ் அருணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.