வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

Published : Sep 07, 2022, 02:56 PM ISTUpdated : Sep 07, 2022, 03:30 PM IST
வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

சுருக்கம்

வட பழநி முருகன் கோவிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

மொத்த காலி பணியிடங்கள்: 23 

பணியின் பெயர்: 

இளநிலை உதவியாளர், தட்டச்சர்,  ஓட்டுநர், உதவி மின் பணியாளர், நாதஸ்வரம், உதவி அர்ச்சகர், உதவி பரிச்சாரகம் , உதவி சுயம்பாகம், வேதபாராயணம் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 

விண்ணப்பிக்கும் தேதி: 

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்து மதத்தினைச் சார்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காலை 10.10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
 

hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி: 

துணை ஆணையர்/ செயல்அலுவலர், 
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், 
வடபழநி, 
சென்னை-26 

வயது வரம்பு: 

விண்ணப்பத்தாரகள் 18 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 

இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஒட்டுநர் பணியிடங்களுக்கு மாதம் ரூ 18500- ரூ58,600 வரை சம்பளமாக வழங்கப்படும். 

உதவி மின் பணியாளர்- ரூ.16,600 - 52, 400 

நாதஸ்வரம்    - ரூ 19500- 62,000

உதவி அர்ச்சகர் - ரூ. 15,900- 50,400 

உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம் - ரூ.10,000 - 31,500 

வேதபாராயணம்  - ரூ. 15,700 - 50,000

மேலும் படிக்க:NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவு வெளியானது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

கல்வித் தகுதி: 

இளநிலை உதவியாளர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்

தட்டச்சர் - அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தல் முதுநிலை (அல்லது) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஓட்டுநர் - 8 ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒராண்டு ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர் - அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 நாதஸ்வரம் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 உதவி அர்ச்சகர் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகம்/ உதவி சுயம்பாகம் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  கோயில்களின் பழக்க வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேதபாராயணம் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்ட தற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை காண

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf

மேலும் படிக்க:மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம் !

PREV
click me!

Recommended Stories

தேர்வு மையமாக மாறிய விமான ஓடுதளம்! 187 காலி இடங்களுக்கு 8000 பேர் போட்டி! பட்டதாரிகளின் பரிதாப நிலை!
என்னது, 100 ரூபாய் இருந்தா போதுமா? டீ, பஜ்ஜி சாப்பிடும் செலவில் வெள்ளியில் செய்யலாம் முதலீடு! இது தெரியாம போச்சே.!