பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் / எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரிந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.
சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுவோர் மும்பை, அகமதாபாத், புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, ஹைதராபாத், ஜெய்பூர், பாட்னா, அமராவதி, புது டெல்லி, கொல்கத்தா, கெளகாத்தி, பெங்களுரூ, லக்னோ, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 87 பணியிடங்கள் நிரப்ப சென்னை என்ற மண்டலத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊர்களில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.05.2017 -இன் படி 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
பணி கான்ட்ரான்ட் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம்:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 30 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
நிரந்தர பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும். இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி காலம்:
இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.