ரூ. 56,000 சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நாளை தான் கடைசி தேதி.

By Thanalakshmi VFirst Published Sep 5, 2022, 5:07 PM IST
Highlights

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

நிறுவனத்தின் பெயர்: இந்திய கடற்படை

காலி பணியிடங்கள்: 112

பணியின் பெயர்:  Tradesman Mate 

விண்ணப்பிக்கும் தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள், முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யப் வேண்டும். 

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதினை, தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்

மேலும் படிக்க:தேசிய பால்வள மேம்பாட்டு வாரியமான NDDB யில் வேலை.. இன்று தான் கடைசி நாள்.. உடனே விண்ணப்பிக்கவும்..

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதும். 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 18 யிலிருந்து 25 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

சம்பள விவரம்: 

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Mate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,000 - முதல் ரூ.56,900 வரை வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து Short Listing செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:ரூ.61,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.. முழு விவரம்

click me!