மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக 540 பணியிடங்கள்.. 10 ஆம் படித்திருந்தால் போதும்.. விவரம் இங்கே

Published : Oct 02, 2022, 01:19 PM IST
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக 540 பணியிடங்கள்.. 10 ஆம் படித்திருந்தால் போதும்.. விவரம் இங்கே

சுருக்கம்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி துணைக் காவல் ஆய்வாளர் , தலைமை காவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

காலியிடங்கள்: 540

பணயின் பெயர்: துணைக் காவல் ஆய்வாளர், தலைமை காவலர் 

பணியின் வகை: மத்திய அரசு வேலை

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: 

மத்தியல் தொழில் பாதுகாப்பு படையின் www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்.. Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரகளின் வயது 18 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் இருந்து சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

துணைக் காவல் ஆய்வாளர் பணிக்கு நிலை 5யின் படி மாத சம்பளமாக  ரூ. 29,200 - ரூ. 92,300 வரை வழங்கப்படும்.

அதே போல் தலைமை காவலர் பணிக்கு நிலை 4யின் படி மாத சம்பளமாக ரூ. 25,500 - ரூ. 81,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

உடற்தகுதி, எழுத்து, திறனறிவு ஆகிய தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

மேலும் படிக்க:ரூ 1. 80 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. விவரம் இங்கே

PREV
click me!

Recommended Stories

சாயம் வெளுத்தது.. என்.டி.ஏ செய்த மெகா தவறு? நாடாளுமன்ற குழு வெளியிட்ட 'பகீர்' ரிப்போர்ட்!
அதிர்ச்சி தகவல்! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,000 காலிப்பணியிடங்கள்.. மாணவர் சேர்க்கையும் கடும் சரிவு!