ரூ.18,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. சம்பளம், கல்வித்தகுதி விவரங்கள் இதோ..

By Thanalakshmi VFirst Published Nov 6, 2022, 3:41 PM IST
Highlights

தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

நிறுவனம்: தமிழக அரசு ( அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு)

பணியின் பெயர்: ஆற்றுபடுத்துநர் ( Counsellor)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://ariyalur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:விண்ணப்பித்துவிட்டீர்களா.? ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் !!

முகவரி: 

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, 
இரண்டாவது தளம்‌, 
அரசு பல்துறை வளாகம்‌, 
ஜெயங்கொண்டம்‌ சாலை, 
அரியலூர்‌ – 621 704.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது 45 க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: 

பணிக்கு தொடர்புடைய உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனை: 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

தொண்டு நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள்,குழந்தை இல்லங்களில் ஆகியவற்றில் குழந்தை சார்ந்த Counselling பணியில் 1 ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாத சம்பளமாக ரூ.18,536 வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

click me!