வங்கிக் கணக்கில் மாயமாகும் ரூ.295: என்ன காரணம்?

Published : Sep 25, 2023, 02:19 PM IST
வங்கிக் கணக்கில் மாயமாகும் ரூ.295: என்ன காரணம்?

சுருக்கம்

உங்கள் வங்கிக் கணக்கில் அவ்வப்போது ரூ.295 வசூலிக்கப்படுவதற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வங்கிகள் சேமிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அத்தகைய சேமிப்பில் இருந்து பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், வங்கிக் கணக்கில் இருந்து அவ்வப்போது ரூ.295 வசூலிக்கப்படும். இந்த தொகை எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இந்த பணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதில் காணலாம்.

NACH (National Automated Clearing House) விதிமுறைகளின் கீழ் கடன் EMI உரிய தேதியில் செலுத்தாதவர்களிடம் இருந்து ரூ.ரூ.295 வசூலிக்கப்படுகிறது. நீங்கள் வங்கியில் வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது கடன் வாங்கி இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதேபோல், வேறு ஏதாவது தொடர் வைப்பு நிதி போன்று மாதமாதம் செலுத்த வேண்டிய தொகை இருந்தாலும், அதனை உரிய தேதியில் செலுத்த வேண்டும்.

சேமிப்பு வங்கிக் கணக்கை மூடினாலும், மூடா விட்டாலும் கட்டணம்; இதோ வங்கிகளின் கட்டணங்கள் குறித்த முழு விவரம்!!

ஆனால், அந்த தேதியில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், அதற்கு ரூ.295 கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் வந்தபின் அந்த ரூ.295 கட்டணம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உரிய தேதியில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் அதற்கு 250 ரூபாய் அபராதம். அதற்கு 18% ஜிஎஸ்டி என 45 ரூபாய். மொத்தமாக வங்கிக் கணக்கில் இருந்து 295 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை சில வங்கிகள் மாதந்தோறும் வசூலிக்கின்றன. ஆனால், சில வங்கிகள் பல மாதங்களுக்கு அபராதத்தை சேர்த்து மொத்தமாக வசூலிக்கின்றன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?