TRF : tata steel news : டிஆர்எப் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.165 கோடி முதலீடு செய்ததையடுத்து, டிஆர்எஃப் பங்குவிலை 5 சதவீதம் உயர்ந்தது.
TRF : tata steel news: டிஆர்எப் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.165 கோடி முதலீடு செய்ததையடுத்து, டிஆர்எஃப் பங்குவிலை 5 சதவீதம் உயர்ந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ரூ.140க்கு விற்பனையான டிஆர்எஃப் பங்கு, 5 சதவீதம் உயர்ந்து ரூ.141.45வரை சென்றது. ஆனால் உடனடியாக லாக் செய்யப்பட்டது.
கடந்த 8ம் தேதி பங்குச்சந்தையில் டிஆர்எஃப் நிறுவனம் செய்த பைலிங்கில் “ டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.165 கோடி முதலீடு செய்து 16.50 கோடி பங்குகளை வாங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இந்த முதலீடு செய்வதற்கு முன் டிஆர்எஃப் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு 34.11 சதவீதப்பங்குகள் இருந்தன. இதன் மூலம் டிஆர்ஃப் நிறுவனத்துக்கு தேவையான கூடுதல் முதலீட்டுத் தேவைகள், கடனைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்டவற்றை செய்யும்.
டிஆர்எஃப் நிறுவனம், மிகப்பெரிய பொருட்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் தொழில்துறைகளான மின்துறை, துறைமுகம், உருக்காலை, சுரங்கத்தொழில், சிமெண்ட் ஆலைஆகியவற்றுக்கான தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.