
இந்திய பங்கு வர்த்தகம்:
வாரத்தின் ஐந்தாவது வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு வர்த்தகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது இந்தியா முழுவதும் இன்று மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதால், இந்திய பங்கு வர்த்தகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மற்ற சந்தை:
பங்குகள், அந்நிய செலாவணி, பணம் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாகவே இந்திய பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் முடிவுற்றது. இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ, பல சலுகைகளை அறிவித்தால், கடந்த இரண்டு நாட்களாகவே இந்திய பங்கு வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.